விருதுநகர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைகளை களையும் வகையில் வருகிற 11-ம் தேதி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பொது விநியோக திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கும் வகையில், ஒவ்வொரு வட்டார பகுதியில் நடத்துவதற்கு நுகர்வோர் உணவு பாதுகாப்பு துறை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இக்கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.
இம்மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் வட்டத்தில் சொக்கலிங்காபுரம் கிராமத்தில் நடைபெற இருக்கிறது. இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர்-சுந்தரபாண்டியம், சிவகாசி-கீழத்தாயில்பட்டி, சாத்தூர்-கஞ்சம்பட்டி, அருப்புக்கோட்டை-மீனாட்சிபுரம், விருதுநகர்-குருமூர்த்திநாயக்கன்பட்டி, காரியாபட்டி-வளையங்குளம், திருச்சுழி-கேத்தநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் மேற்குறிப்பிட்ட நாளில் காலை 10 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து 1 மணி வரையில் நடைபெற இருக்கிறது. அந்தந்த வட்டாரப் பகுதி கிராமங்களில் நடைபெற இருக்கிற கூட்டத்திற்கு வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமை வகிக்க இருக்கிறார்.
எனவே பொதுவிநியோக திட்டத்தில் காணப்படும் குறைகளை கோரிக்கை மனுக்களாகவே, நேரடியாகவோ தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவும் இருக்கிறது. அதனால், கிராம மக்கள் தவறாமல் பங்கேற்கும் படி ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டு கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

